star

auto scroll

Blogger Widgets

NEW PAGE

just

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!

FREE SMS

கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON kalvisaithi என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு kalvisaithi (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON kalvisaithi என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.

email

உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow by Email

sms new

FREE EDUCATIONAL DEPARTMENT FLASH NEWS ON UR MOBILE TYPE "ON kalvisaithi" send 9870807070Blogger Widgets

ஆசிரியர்கள் - PAPER NEWS

Wednesday, May 22, 2013

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது.

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

முதல் சுற்று -29.05.2013 & 30.05.2013,
இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013          

9 ஆம் வகுப்பில் ஒரு பாடம் மட்டும் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்று அல்லது இரண்டாம் சுற்று என இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொண்டால் போதும். 9 ஆம்வகுப்பில் 2 பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்றில் 2 நாட்களும் , 2ஆம் சுற்றில் 01.06.2013 அன்று மட்டும் என மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களில் வேலை செய்பவர்களும் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

"திறக்கப்படாத சிப்பிகள்" – தமிழ்வழியில் பயின்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலை.

*.ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு 2012 க்கான தமிழ் வழியில் படித்துதேர்வு பெற்றதேர்வர்கள் பணி நியமனம் செய்யப்படாத நிலை குறித்து முழு விளக்கம்

*.2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர் தேர்வு நாளிதழ் மற்றும் டி.ஆர்.பி தேர்வு வாரிய ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.

*.இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் இதர மொழிகளுக்கு என தேர்வு அறிவிப்பு மொத்தம் 2895 காலியிடங்கள் அறிவிப்பு வெளிவந்த்து.

*.காலி பணியிடங்கள் அறிவிப்பில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பாட பிரிவு நீங்கலாக) முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட தமிழ் வழியில்பயின்ற மணவர்களுக்க அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை என்ற அரசாணை 69 நாள் 27.05.2009 ன் படி அனைத்து பாட பிரிவுகளிலும் மொத்தம் 390 பணியிடங்கள் இனவாரியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்த்து.

*.தேர்வு மே 2012 ம் மாதம் நடைபெற்றது.

*.ஆகஸ்ட் 2012 ம் மாதம் முதல் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் உட்பட மொத்தம் 3000 நபர்கள் அழைக்கப்பட்டனர்.

*.தமிழ் வழியில் படித்த்தற்கான முன்னுரிமை கோரி சான்றிதழ் சரி பார்ப்பிற்கு அழைத்த நபர்கள் உரிய கல்வி முறையே 10 வகுப்பு, 12 வகுப்பு, இளநிலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் கல்வியியல் பட்டம் என தமிழ் வழியில் படித்த்தற்க்கான சான்றிதழ் சரி பார்ப்பின் போது கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த்து.

*.இதில் இளநிலை கல்வியியல் பட்டத்திற்கான சான்றிதழ் அவரவர் பயின்ற கல்லுரி முதல்வரிமோ அல்லது பல்கலைகழகத்தின் உரிய அதிகாரியிடம் பெற்று வர தெரிவிக்கப்பட்டிருந்த்து.

*.மேற்கூறிய படி சான்றிதழ்கள் அனைத்தும் தமிழ் வழியில் பயின்றதேர்வர்களால் அளிக்கப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்பு முடிவுற்றது.

*.இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் காரணமாக மேற்கண்ட தேர்வு பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் இரத்து செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிட தெரிவிக்கப்பட்டது.

*.உயர் நீதி மன்ற ஆணைப்படி புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 6000 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பழைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்தவர்கள் வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த்து.

*.இரண்டாவது பட்டியலிலும் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமையுடன் தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியலில் முதல் பட்டியலில் தேர்வானவர்கள் பெயரும் இடம் பெற்று இருந்த்து.

*.இந்நிலையில் கடந்த 10.12.2012ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் இறுதிசெய்யப்பட்ட தேர்வு பட்டியல் டி.ஆர்.பிஇணையதளத்தில் வெளியிடப்பட்டது.

*.தேர்வு பட்டியலில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் தமிழ் வழி முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வாளர்கள் மற்றும் தாரவரவியல் பாடப்பிரிவு தேர்வாளர்களை தவிர மற்றவர்கள் தேர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது

*. இது குறித்து அடுத்த நாள் செய்திதாள்களில் தமிழ் வழியில் படித்த நபர்கள் போதுமான அளவு அனைத்து பிரிவுகளிலும் இல்லாத்தால் அது குறித்து முடிவு செய்த தேர்வு முடிவு பின்னர் வெளியிடுவதாக டி.ஆர்.பி அறிவித்த்து.

*.ஆனால் காலம் கடந்தது.தேர்ச்சி பெற்ற 2300 நபர்களுக்கு மட்டும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி மாண்புமிகு முதல்வர் அவர்களின் கரத்தினால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

*.அதன் பின்னர் எந்தெந்த பல்கலைகழகங்கள் தமிழ் வழி கல்வியை நடத்தி வருகிறது என்ற விபரம் அறிய அந்தந்த பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அந்த விபரங்கள் பல்கலைகழகங்கள் அளித்த பின்பு தேர்வு முடிவு வெளியிடப்படுவதாக தமிழ் வழியில்தேர்வு பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தாவரவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு வழக்கு உள்ளதால் வழக்கு முடிவுற்ற பின் வெளியிடப்படும் என்றும் செய்தி நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.

*.ஆனால் 18.01.2013 அன்று டி,.ஆர்.பி இரண்டாம் பட்டியல் ஒன்று வெளியிட்டது. அதில் முதுகலை அறிவியல் பிரிவு பாடங்களில் தமிழ் வழியில் இல்லை படிப்பு இல்லையெனவும் ஆனால் வணிகவியல், பொருளாதாரம், மற்றும் வரலாறுபாடங்களில் உள்ளதாகவும் எனவே சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பின் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.

*.தற்போது27.03.2013 அன்று தாவரவியல் பாடப்பிரிவு தேர்வு பட்டியல் சென்னை டி.ஆர்.பி அலுவலக பலகையில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணியிட தேர்வு பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.

*.தற்போது இளநிலை கல்வியியல் பல்கலைகழகத்திடம் தமிழ் வழியில் பாடம் நடத்தப்பட்டதா? என்றுடி.ஆர்.பிசான்று கேட்கப்பட்டதாகவும் அதற்கு பதில் வந்தவுடன் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்றும்நேரிடையாக தேர்வர்களிடம்தெரிவிக்கப்பட்டது.

*.என்ன காரணத்தினால் தேர்வர்களுக்கு சான்றிதழ் அளிக்கவில்லை என தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகத்தின் அதிகாரிகளிடம் தேர்வர்கள் விசாரித்த போதுஅவர்கள் கூறியதாவது -”தமிழகத்தில் எந்த தனியார் கல்லுரியும் தமிழ் வழியில் கல்வியியல் நடத்த அனுமதி கேட்கவும் இல்லை அதனால் அனுமதி வழங்கவும் இல்லை. தற்போது இது போன்ற சட்டத்தினால் தான் இந்த வருடத்தில் இருந்து நாங்கள் ””தமிழ் வழி கல்வி””என்று தனியே வழங்குகிறோம் எனவே அதற்கு முன்னர் பயின்ற அனைவரும் ஆங்கில வழியாகவே கருதப்படுவர்என தெரிவித்துள்ளார்”.

*.உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கூட இதற்கு முன் மாணவர்கள் எவருக்கும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றுகளை வழங்கவில்லை. காரணம் அதற்கு தேவை ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இந்த புதிய இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்ததும் மாணவர்களின் நலன் காக்க பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை வழங்கி உள்ளது. இதேபோல் உரிய பல்கலைகழகங்களும் மாணவர்களின் நலன்கருதி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றினை வழங்க வேண்டும் என தேர்வர்கள்பலகட்டமாக முயற்சி செய்து வந்தனர்.

*.”தேர்வர்கள் பயின்றது தமிழ் வழியில் தான், தமிழ் பள்ளிகளில் தான்  ஆசிரியர் பயிற்சி எடுத்தோம், கல்லுரி பதிவேடுகள் அனைத்தும் தமிழில் தான் எழுதி உள்ளோம். இந்த நிலையில் தங்களால் நடத்தப்பட்ட கல்லுரி தேர்வுகளுக்கும் தமிழ் வழியில்தான் வினாத்தாள் இருந்த்து, மேலும் நாங்கள் தமிழில் தான் தேர்வு எழுதி தங்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள்” என விளக்கங்களை கூறியும் முயற்சி செய்து வந்துள்ளனர்.

*. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்W.P.No.25835 of 2012ன் படி தமிழ் வழியில் தேர்வுகள் அனைத்தும் எழுதியிருந்தாலே அவர் தமிழ் வழியில் பயின்றதாகவே கருத வேண்டும். என உத்திரவு வழங்கியுள்ளது.

*.பாடம் பயிற்றுவித்த கல்லுரிகள் தமிழ் வழியில் பாடம் பயின்றதாக தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளன. ஆனால் பல்கலைகழங்கள் தரமறுத்ததால் தமிழ் நாட்டில் பி.எட்டில் -தமிழ் வழி கல்வியே இல்லைஎனும் நிலை ஏற்பட்டது.

*.தற்போது டி.ஆர்.பி யால் 9.5.2013 அன்று புதிய முதுகலை ஆசிரியர் தேர்வு 2881 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு என 20 சதவீதம் ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 400 இடங்கள் வரை அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.

*.இந்த நிலையில் மீண்டும் 3வது முறையாக தமிழ் வழி முதுகலை பட்டதாரிகளின் அடுத்த கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 23,24 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சாிபார்ப்பு செய்யப்பட இருக்கிறது. முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் தற்போது உரிய சான்றிதழ்களை பல்கலைகழகத்திடம் இருந்து பெற்று இருந்தால் அவர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி நேரிடையாக டி.ஆர்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

*.இந்நிலையில் ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பி அதிகாரிகள் மற்றும் தேர்வர்களின் தொடர்முயற்சி காரணமாக சென்னை பல்கலைகழகம், தமிழ்நாடு இளநிலை கல்வியியல் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் போன்ற பெரும்பாலான பல்கலைகழகங்கள் முதன் முதலில் தேர்வாகியுள்ள தேர்வர்களும் தமிழ் வழியில் பயின்றுள்ளார்கள் என சான்று வழங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*.இவ்வாறு உரிய சான்று பல்கலை கழகத்தால் வழங்கப்படுமாயின் முதல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கே நிச்சய பணி வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.

*.அப்படியானால் ஏப்ரல் 23, 24 ஆம் தேதிகளில் சரிபார்ப்பில் கலந்துகொள்பவர்களின் நிலை ஏமாற்றமாகி விடக் கூடாது. மற்ற பாடங்களில் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கியது போல் இதுவரை நடந்துள்ள மற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் கலந்து கொண்டு உரிய தகுதியுடன் சரியான சான்றிதழ்களை சமர்பித்த (தாவரவியல் முதுகலை பட்டதாரிஆசிரியர்கள் உட்பட) அனைவருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும் என்பதே தேர்வர்களின் விருப்பமாகும். அதுவே அனைவரின் விருப்பமும் ஆகும். விரைவில் அனைவருக்கும் பணி  கிடைக்க வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம்17, 18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது சென்னை ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டுமாதம்17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பபடிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் அடுத்தமாதம்(ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.ஆசிரியர்தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவசகட்டாய கல்விஉரிமைச்சட்டத்தின் படி,இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக் குதகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் சுமார்23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.ஏறத்தாழ 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில்10397இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சிபெற்றனர்.இந்ததகுதித் தேர்வு மூலம்,காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்,தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாகநிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.எனவே,இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்?என்று இடைநிலை ஆசிரியர்களும்,பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.தேர்வு தேதி அறிவிப்பு இந்த நிலையில்,தகுதித்தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது.அதன் படி,இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம்17–ந் தேதி அன்றும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும்(ஆகஸ்ட்18) நடத்தப்படஉள்ளது.காலை10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.தகுதித்தேர்வுக்கு மொத்தமதிப்பெண் 150 ஆகும்.தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த பட்சமதிப்பெண் 60 சதவீதம் அதாவது150–க்கு90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண்சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
விண்ணப்பம்எப்போது?
தகுதித்தேர்வுக்கான விண்ணப்பபடிவங்கள் அடுத்த மாதம்(ஜூன்) 17–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல் நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.விண்ணப்பத்தின் விலை ரூ.50.
தேர்வுக்கட்டணம்ரூ.500.
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250
மட்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி(டி.இ.ஓ.ஆபீஸ்) அலுவலகத்தில் ஜூலை மாதம்1–ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு ஏறத்தாழ 7 லட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.எனவே,சுமார்14 லட்சம் விண்ணப்பபடிவங்களை அச்சிட முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.இதனால்,ஒரு சில மாவட்டங்களில் கட்டுக்கடங்காதகூட்டம் அலை மோதி நெரிசல் ஏற்பட்டது.இதை தவிர்க்கும் வகையில்,இந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 15 ஆயிரம் காலி இடங்கள் கடந்த ஆண்டுக்கான காலி பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம்15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் 13 ஆயிரம்,இடைநிலை ஆசிரியர் இடங்கள் 2 ஆயிரம்.பணி நியமன முறையில் இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.முதலில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.அதன் பிறகு தகுதியான நபர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.இதைத் தொடர்ந்து,காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்த மட்டில் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2,டிகிரி,பி.எட்.மதிப்பெண் அடிப்படையில் மெரிட்பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்தேர்வு செய்யப்படுவார்கள்.இடைநிலை ஆசிரியர்கள் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு,மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.inஎன்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல்27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரைwww.dge.tn.nic.inஎன்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நடைபெற்ற மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் மாணாக்கர் தாம் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் (பாடங்களின் எண்ணிக்கை வரம்பின்றி), எதிர்வரும் ஜூன்/ஜூலை 2013 பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வில் தேர்வெழுதலாம்.பள்ளி மாணாக்கராய்த் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்/வருகை புரியாதோர், ஜூன் பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், S.H வகை விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் வழங்கக்கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறைபள்ளி மாணாக்கர்www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பித்து, அதில் கோரப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் தமது புகைப்படத்தினைஸ்கேன் செய்ய வேண்டும். State Bank of India சலானை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI)ன் ஏதேனும் ஒரு கிளையில் 27.05.2013 -ற்குள் செலுத்தவேண்டும்.செலுத்தும் நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது. ஆன்-லைன் விண்ணப்பத்தின் வலதுபக்கத்தில் உரிய இடத்தில் மாணாக்கர் தனதுமற்றுமொரு புகைப்படத்தினை ஒட்டி “attestation” (பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது Gazetted Officer இடம் ) பெற வேண்டும். பின்னர்,(1) ஸ்கேன் செய்த மாணவரின் புகைப்படத்துடன் கூடிய “Confirmation copy” எனக் குறிப்பிடப்பட்ட ஆன்-லைன் விண்ணப்பம்,(2) தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்திய சலான் (Department Copy) இரண்டையும் இணைத்து மாணாக்கர் தாம் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளித் தலைமைஆசியர்கள் விண்ணப்பங்களை பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசையில் அடுக்கிப் மாணாக்கரின் பெயருடன் பட்டியலிட்டு, பட்டியலின் இரு நகல்களுடன் ஆன்-லைன் விண்ணப்பங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 28.05.2013 –ற்குள் (பகல் 12 மணிக்குள்) தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளால் ஒப்படைக்கப்படும் ஆன்-லைன் விண்ணப்பங்களை கல்வி மாவட்டவாரியாக கட்டி, 29.05.2013 அன்று தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில்முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஒப்படைக்க வேண்டும்.எனவே. இப்பணியின்பால் சிறப்புக் கவனம் செலுத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35/- ம் செலுத்தவேண்டும். Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டState Bank of India challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள் வசம் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.ஆன்/லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் :தேர்வர்கள் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான SBI சலானையும் 27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27.05.2013( திங்கட்கிழமை). செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்:அ) பள்ளிமாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன்விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 27.05.2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஆ) மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன்விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள்மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரரகரிக்கப்படும்.